நிதி அமைச்சகமானது, "தரநிலை" மற்றும் "தகுதி" நிலைகளுடன் எளிமைப்படுத்தப் பட்ட இரண்டு அடுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை முன்மொழிந்துள்ளது.
இரண்டு முதன்மை நிலைகளுக்கு வெளியே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்குகளுக்கு சிறப்பு விகிதங்கள் பேணப்படும்.
மலிவுத் தன்மை மற்றும் நுகர்வை அதிகரிக்க பொதுவான வீட்டு மற்றும் நுகர்வோர் வாங்க விரும்பும் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்கும் திட்டங்கள் உள்ளன.
இழப்பீட்டு வீத வரியின் ரத்து ஆனது விகிதச் சீரமைப்பிற்கான நிதி சார் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
உள்ளீட்டு வரி வரவின் திரட்சியைக் குறைக்க தலைகீழ் வரிக் கட்டமைப்புகளை சரிசெய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதைய நான்கு அடுக்கு முறை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகும்.
இனி 5% மற்றும் 18% அடுக்குகள் மட்டுமே தக்க வைக்கப்படும்.
இது 12% மற்றும் 28% வரி வரம்புகளை முற்றிலுமாக நீக்குவதை உள்ளடக்கும்.
1%க்கும் குறைவான சலுகை விகிதம் மற்றும் ஐந்து முதல் ஏழு பொருட்களுக்கு 40% என்ற அதிக "பாவ வரி விகிதம்" அறிமுகப்படுத்தப்படும்.
தற்போது 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% விகிதத்திற்கு மாற்றப்படும், மேலும் 28% அடைப்பில் உள்ள 90% பொருட்கள் மற்றும் சேவைகள் 18%க்கு மாற்றப்படும்.
இனி ஜிஎஸ்டி விகிதங்களுக்கு மேல் எந்த வகையான வரியும் இருக்காது.