பேரழிவுகளிலிருந்துச் சமூகங்களைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களைக் கௌரவிப்பதற்காக இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மே 04 ஆம் தேதியானது தீயணைப்பு வீரர்களின் பெரும் புரவலர் துறவியான புனித புளோரியனின் விழா நாள் என்பதால் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தீயணைப்பு படைகளை நன்கு ஒழுங்கமைத்த ஒரு ரோமானிய அதிகாரியான அவர் உயிர்களைப் பாதுகாப்பதில் அவரது தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக நினைவு கூரப் படுகிறார்.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவைச் சேர்ந்த 5 ஜீலாங் மேற்கு தீயணைப்பு படை உறுப்பினர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்தனர்.
இந்த கொடூரமான நிகழ்வின் விளைவாக இந்த நாள் நிறுவப்பட்டது.