TNPSC Thervupettagam

சர்வதேசத் தீவிரவாதி

May 2 , 2019 2229 days 735 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றமானது (UNSC - United Nations Security Council) பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவித்துள்ளது.
  • இந்த முடிவானது UNSC-ன் 1267 அல் கொய்தா மீதான தடைக் குழுவினால் எடுக்கப்பட்டது.
  • அசார் மற்றும் அவரது அமைப்புகள் சொத்துகள் முடக்கம், பயணம் மேற்கொள்ளுவதற்குத் தடை மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பதற்குத் தடை ஆகியவற்றை எதிர்கொள்ள விருக்கின்றன.
  • மசூத் அசாரைக் கறுப்புப் பட்டியலில் வைப்பதற்கான முந்தைய 4 முயற்சிகளுக்கு சீனா தடை விதித்திருந்தது.
  • இந்தத் தடைச் செய்யப்பட்டவர்களின் பட்டியலானது தற்பொழுது 262 தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் 83 அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.
  • 1267 அல் கொய்தா மீதான தடைக் குழுவின் நோக்கமானது அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்திய தாக்குதல்கள்
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மசூத் அசாரின் அமைப்பானது இந்தியாவில் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலை நடத்தியது.
  • அசாரால் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுமையான தாக்குதல்கள் பின்வருமாறு
    • 2008 ஆம் ஆண்டின் மும்பை தீவிரவாதத் தாக்குதல்.
    • 2016 ஆம் ஆண்டின் பதான்கோட் விமான தளத் தாக்குதல் மற்றும் பிற.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்