ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றமானது (UNSC - United Nations Security Council) பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவித்துள்ளது.
இந்த முடிவானது UNSC-ன் 1267 அல் கொய்தா மீதான தடைக் குழுவினால் எடுக்கப்பட்டது.
அசார் மற்றும் அவரது அமைப்புகள் சொத்துகள் முடக்கம், பயணம் மேற்கொள்ளுவதற்குத் தடை மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பதற்குத் தடை ஆகியவற்றை எதிர்கொள்ள விருக்கின்றன.
மசூத் அசாரைக் கறுப்புப் பட்டியலில் வைப்பதற்கான முந்தைய 4 முயற்சிகளுக்கு சீனா தடை விதித்திருந்தது.
இந்தத் தடைச் செய்யப்பட்டவர்களின் பட்டியலானது தற்பொழுது 262 தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் 83 அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.
1267 அல் கொய்தா மீதான தடைக் குழுவின் நோக்கமானது அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்திய தாக்குதல்கள்
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மசூத் அசாரின் அமைப்பானது இந்தியாவில் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலை நடத்தியது.
அசாரால் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுமையான தாக்குதல்கள் பின்வருமாறு
2008 ஆம் ஆண்டின் மும்பை தீவிரவாதத் தாக்குதல்.
2016 ஆம் ஆண்டின் பதான்கோட் விமான தளத் தாக்குதல் மற்றும் பிற.