2025 ஆம் ஆண்டு சர்வதேசப் புலம்பெயர்வு கண்ணோட்ட அறிக்கையானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (OECD) வெளியிடப் பட்டது.
OECD நாடுகளுக்கான நிரந்தரப் புலம்பெயர்வு 2024 ஆம் ஆண்டில் 4% குறைந்து 6.2 மில்லியனாக இருந்தது ஆனால் இது 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 15% அதிகமாக இருந்தது.
குடும்ப மறு ஒருங்கிணைப்பு ஆனது புலம்பெயர்வுக்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்த அதே நேரத்தில் தொழிலாளர் புலம்பெயர்வு 21% குறைந்துள்ளது மற்றும் மனிதாபிமான நடவடிக்கை சார்ந்த புலம்பெயர்வு 23% அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியது என்ற நிலையில்அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவில் தாக்கல் செய்யப் பட்டன.
இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை இதில் அதிகமான அளவு பங்களிப்பாளர்களாக உள்ள நிலையில், ஆசியாவானது புலம்பெயர்ந்த சுகாதார நிபுணர்களின் முன்னணி ஆதாரமாகத் தொடர்ந்து திகழ்கிறது.
2023 ஆம் ஆண்டில், சுமார் 600,000 இந்தியர்களுடன் OECD நாடுகளுக்கான புதிய குடியேறிகளுக்கான முதன்மையான மூல நாடாக இந்தியா உருவெடுத்தது.
இது முந்தைய ஆண்டை விட 8% அதிகம் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் OECD நாடுகளில் புகலிடம் தேடுபவர்களுக்கான முதன்மையான மூல நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.