சர்வதேச அணுசக்தி சோதனை எதிர்ப்பு தினம் - ஆகஸ்ட் 29
August 30 , 2024 702 days 369 0
அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் அணு குண்டு வெடிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்நாளைக் கடைப்பிடிப்பதன் முக்கிய நோக்கமாகும்.
அணு ஆயுதம் இல்லாத உலகம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வரை அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ள ஒரே நாடு அமெரிக்கா ஆகும்.
இத்தினமானது 1991 ஆம் ஆண்டில் செமிபாலடின்ஸ்க் அணுசக்தி சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூருகிறது.