சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மையம்
December 31 , 2018 2409 days 770 0
பிரதமர் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மைய வளாகத்தை ஆரம்பித்தார்.
இந்த வளாகம் தெற்காசியாவில் அரிசி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான ஒரு மையமாக செயல்படும்.
இந்த நிறுவனம் இந்த பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த ஸ்டார்ச் மூலக்கூறுகளோடும் அதிகளவு ஊட்டச்சத்து மதிப்புகளோடும் இருக்கின்ற வகையில் குறைந்த அளவு நீரில் வளரக்கூடிய நெல் வகைகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்திடும்.