நிலையான வளர்ச்சி மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் ஆர்கன் மரத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆர்கன் மரமானது (ஆர்கானியா ஸ்பினோசா) தென்மேற்கு மொராக்கோவைத் தாயகமாகக் கொண்டது; இது வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் வளர்கிறது.
"திரவத் தங்கம்" என்று அழைக்கப்படும் ஆர்கன் எண்ணெய் உணவு, மருந்து மற்றும் அழகுசாதனத் தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆர்கன் மரமானது சுற்றுச்சூழல் அமைப்பு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பாரம்பரிய எண்ணெய் உற்பத்தி மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை, குறிப்பாக கிராமப் புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது.
2021-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதிகாரப்பூர்வமாக இந்நாளை அறிவித்தது.
யுனெஸ்கோ (UNESCO) 1998-ஆம் ஆண்டில் ஆர்கனேரி உயிர்க்கோளக் காப்பகத்தை அங்கீகரித்தது மற்றும் 2014-ஆம் ஆண்டில் ஆர்கன் தொடர்பான பாரம்பரிய அறிவை மகத்தான கலாச்சாரப் பாரம்பரியமாகப் பட்டியலிட்டது.