சர்வதேச இன அழிப்பு நிகழ்வின் நினைவு தினம் - ஜனவரி 27
January 28 , 2025 519 days 317 0
இது இன அழிப்புக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக சர்வதேச நினைவு தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
1945 ஆம் ஆண்டில் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜி வதை மற்றும் அழிப்பு முகாமில் சிக்கியிருந்தவர்களின் விடுதலையைக் குறிக்கும் வகையில் இந்த நாளை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தேர்வு செய்தது.
2025 ஆம் ஆண்டானது இரண்டாம் உலகப் போர் மற்றும் இன அழிப்புக் கொடுமை நிகழ்வு முடிவடைந்து 80 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Holocaust Remembrance for Dignity and Human Rights" என்பதாகும்.