TNPSC Thervupettagam

சர்வதேச குற்றவியல் துறையின் முதல் ஊதா அறிக்கை

September 4 , 2025 18 days 64 0
  • அமலாக்க இயக்குநரகம் (ED) ஆனது சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பிலிருந்து (இன்டர்போல்) அதன் முதல் ஊதா அறிக்கையினைப் பெற்றுள்ளது.
  • உலக நாடுகளில் செயல்படும் புதிதாக அடையாளம் காணப்பட்ட, வர்த்தக அடிப்படையிலான பணமோசடி (TBML) வலையமைப்பு குறித்து 196 உறுப்பினர் நாடுகளுக்கு ஊதா அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.
  • சட்டவிரோத நிதிகளை இடம் மாற்ற போலி/ஷெல் நிறுவனங்கள் எவ்வாறு போலி வர்த்தக ஆவணங்கள், விலைப் பட்டியல் இல்லாத இறக்குமதிகள் மற்றும் சுழற்சி முறையிலான மறு ஏற்றுமதிகளைப் பயன்படுத்தின என்பதை இந்த அறிக்கை விவரிக்கிறது.
  • ஊதா அறிக்கையானது, உலகளாவிய நிறுவனங்கள் மறைமுக முறைகள் குறித்த உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது மற்றும் ARIN-AP மற்றும் குளோப் நெட்வொர்க் போன்ற வலையமைப்புகள் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்