திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் சர்வதேச சுற்றுலா வர்த்தக மையத்தின் 7-வது பதிப்பு நடைபெற்றது.
இது வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் திரிபுரா மாநில அரசின் சுற்றுலாத் துறைகளுடன் இணைந்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டின் கருத்துரு ”சாகச சுற்றுலா” (Adventure Tourism) என்பதாகும்.
இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வடகிழக்குப் பிராந்தியத்தின் சுற்றுலாத் திறனை சிறப்பித்துக் காட்டும் நோக்குடன் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.