- 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ‘ஸ்டார்ட் அப் இந்தியா துணிகர மூலதன உச்சி மாநாடானது’ கோவாவில் நடத்தப்பட்டது.
- இந்த மாநாடானது,
- மத்திய வணிக மற்றும் தொழிற்துறையின் கீழ் இயங்கும் தொழிற்துறைக் கொள்கை மற்றும் ஊக்கமளிப்புத் துறை (DIPP - Department of Industrial Policy and Promotion)
- கோவா அரசாங்கம்
ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
- இந்த உச்சி மாநாடானது இந்தியாவிற்குள் சர்வதேச முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த உச்சி மாநாட்டின் கருத்துருவானது “இந்தியாவில் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக உலக முதலீடுகளைத் திரட்டுதல்” என்பதாகும்.
- இந்த உச்சி மாநாட்டிற்கு,
- உலக வங்கிக் குழுவின் சகோதர நிறுவனமான சர்வதேச நிதியியல் கழகம் (IFC - International Finance Corporation)
- இன்வெஸ்ட் இந்தியா மற்றும்
- இந்தியத் தனியார் பங்கு மற்றும் துணிகர முதலீட்டு மன்றம் (IVCA - The Indian private equity and Venture Capital Association)
ஆகியவை பங்காளர் நிறுவனங்களாக உள்ளன.