மார்கோர் இனங்கள் மற்றும் அதன் மலைப்பகுதி வாழ்விடங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 24 அன்று சர்வதேச மார்கோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மார்கோர் (காப்ரா ஃபால்கோனெரி) என்பது ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் மலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகையான காட்டு வெள்ளாடு ஆகும்.
இந்த இனம் IUCN அமைப்பால் "அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்" எனப் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் 1992 ஆம் ஆண்டு முதல் CITES ஒப்பந்த அமைப்பின் பின்னிணைப்பு I-இல் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2024 ஆம் ஆண்டில் முதல்முறையாக மார்கோர் தினத்தை அனுசரித்தது.
நீண்ட சுருள் வடிவக் கொம்புகளுக்குப் பெயர் பெற்ற மார்கோர் பாகிஸ்தானின் தேசிய விலங்காகும்.