மொழியியல் மற்றும் கலாச்சாரப் பிளவுகளை மிகவும் நன்கு இணைப்பதில் மொழி பெயர்ப்பாளர்களின் விலைமதிப்பற்றப் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்தத் தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேதியானது மொழிபெயர்ப்பாளர்களின் புரவலராகக் கருதப்படும் புனித ஜெரோமின் மறைவு நாளுடன் ஒத்துப்போகிறது.
புனித ஜெரோம், பைபிளின் புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளின் பெரும்பாலான பகுதியை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்ததற்காகப் பெரும் புகழ் பெற்றவர் ஆவார்.
எபிரேய நற்செய்தி நூல்களின் சிலப் பகுதிகளையும் அவர் கிரேக்க மொழியில் மொழி பெயர்த்தார்.
UNESCOவின் இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unveiling the Many Faces of Humanity" என்பதாகும்.