இந்தத் தினம் என்பது உலகளவில் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் விளையாட்டின் முக்கியப் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.
குழந்தைகள் இளைப்பாறச் செய்தல், ஓய்வு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியன இதில் 31வது சரத்தின் கீழ் ஓர் அடிப்படை உரிமையென ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Choose Play – Every Day" என்பதாகும்.