வெப்பமண்டலப் பகுதிகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த அனுசரிப்பு 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) நிறுவப் பட்டது.
வெப்பமண்டலப் பகுதிகள் கடக ரேகை மற்றும் மகர ரேகைக்கு இடையே அமைந்து உள்ளன என்பதுடன் மேலும் இவை ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கியுள்ளன.
இப்பகுதி பூமியின் மேற்பரப்பில் சுமார் 40%-ஐ உள்ளடக்கியது மற்றும் உலகளாவியப் பல்லுயிர்ப் பெருக்கத்தில் கிட்டத்தட்ட 80%-ஐக் கொண்டுள்ளது.
இந்த தினம் வெப்பமண்டலப் பகுதிகளில் பருவநிலை மாற்றம், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.