சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) என்பவருக்குச் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரிய மனித உரிமைகள் பரிசானது வழங்கப்பட்டது.
சிந்தனைச் சுதந்திரத்திற்கான சாகரோவ் பரிசானது பொதுவாக சாகரோவ் பரிசு என அழைக்கப்படுகிறது.
இது மனித உரிமைகள் மற்றும் சிந்தனைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவ விருதாகும்.
ரஷ்ய விஞ்ஞானியும் கொள்கை எதிர்ப்பாளருமான ஆன்ட்ரே சாகரோவ் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்ட இந்தப் பரிசானது 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியப் பாராளுமன்றத்தினால் நிறுவப்பட்டது.