மேற்கு வங்காளத்தின் திதாகார்ஹ் மரைன்கள் என்ற நிறுவனம் சாகர் அன்வேஷிகா என்ற ஆராய்ச்சிக் கப்பலை வெற்றிகரமாக உருவாக்கி, அதை சென்னையில் உள்ள NIOTயிடம் ஒப்படைத்துள்ளது.
இது பல்வேறு கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்.
தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT - National Institute of Ocean Technology) புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
திதாகார்ஹ் நிறுவனம் இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் கடலோர ஆராய்ச்சிக் கப்பலான “சாகர் தாரா” என்ற கப்பலை அறிமுகப்படுத்தியது.