24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நினைவுக் குறிப்புகள் மற்றும் இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப் படுகிறது.
கவிதைப் பிரிவில் பிரசுன் பந்தோபாத்யாய் (வங்காளம் - 'ஷ்ரேஸ்தா கபிதா'), யோகேஷ் வைத்யா (குஜராத்தி - 'பத்த்கடாகி') மற்றும் நந்தினி சிதா ரெட்டி (தெலுங்கு - 'அனிமேஷா') ஆகியோர் விருது வென்றுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் நவ்ஜோத் சர்னா (ஆங்கில நாவல் - 'கிரிம்சன் ஸ்பிரிங்'), மம்தா காலியா (இந்தி நினைவுக் குறிப்பு - 'ஜீதே ஜீ அலகாபாத்') மற்றும் என். பிரபாகரன் (மலையாள நாவல் - 'மாயமனுஷ்யர்') ஆகியோர் அடங்குவர்.
தமிழ் மொழியில், தமிழ் சிறுகதைகளின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக ச. தமிழ்செல்வன் இவ்விருதை வென்றுள்ளார்.
இந்த விருது ஒரு செப்புப் பட்டயம், பொன்னாடை மற்றும் ₹1,00,000 ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.