மத்திய அரசின் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் வரைவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும் வரை அனைத்து மாநிலங்களும் இதை செயல்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த திட்டமானது சாட்சிகள், பொருத்தமான மற்றும் போதுமான பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்ய முயற்சிக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 195-A சாட்சிகளின் பாதுகாப்புடன் தொடர்புடையது ஆகும்.
இந்த சாட்சிகள் பாதுகாப்புத் திட்டமானது கீழ்க்காண்பனவற்றின் ஆலோசனையுடன் இறுதி செய்யப்பட்டது.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA – National Legal Services Authority)
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
இது அச்சுறுத்தலின் அடிப்படையில் 3 வகை சாட்சிகளைக் கொண்டு இருக்கின்றது.
ஏற்கனவே அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், சீனா, இத்தாலி, கனடா, ஹாங்காங் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தைக் கொண்டுள்ளன.