பிரதமர் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆனது (CCPA), அடுத்து மேற்கொள்ள உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி வாரிப் பதிவினை மேற்கொள்ள அங்கீகரித்துள்ளது.
1951 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் பற்றிய தரவுகளை வெளியிட்டது ஆனால் மற்ற சாதிகள் பற்றிய தரவுகளை வெளியிடவில்லை.
அதற்கு முன்னதாக, 1931 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் சாதி பற்றிய தரவு இருந்தது.
இருப்பினும், 1941 ஆம் ஆண்டில், சாதி அடிப்படையிலான தரவுகள் சேகரிக்கப்பட்டன ஆனால் அவை எதுவும் வெளியிடப்படவில்லை.
மண்டல் ஆணையம் ஆனது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள் தொகையை 52% என மதிப்பிட்டது.
இந்திய அரசியலமைப்பின் 246வது சரத்தின் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது ஏழாவது அட்டவணையின் மத்தியப் பட்டியலில் 69வது இடத்தில் பட்டியலிடப் பட்டுள்ளதால், இது ஓர் ஒன்றிய அரசின் கீழ் உள்ள விவகாரமாக அமைகிறது.
2022 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவில் அனைத்துச் சாதிகளையும் வெற்றிகரமாக கணக்கெடுத்த முதல் மாநிலமாக பீகார் மாறியது.
பின்னர், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொண்டன.