TNPSC Thervupettagam

சாதிவாரிக் கணக்கெடுப்பு நிலை 2025

May 3 , 2025 43 days 79 0
  • பிரதமர் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு னது (CCPA), அடுத்து மேற்கொள்ள உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி வாரிப் பதிவினை மேற்கொள்ள அங்கீகரித்துள்ளது.
  • 1951 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் பற்றிய தரவுகளை வெளியிட்டது ஆனால் மற்ற சாதிகள் பற்றிய தரவுகளை வெளியிடவில்லை.
  • அதற்கு முன்னதாக, 1931 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் சாதி பற்றிய தரவு இருந்தது.
  • இருப்பினும், 1941 ஆம் ஆண்டில், சாதி அடிப்படையிலான தரவுகள் சேகரிக்கப்பட்டன ஆனால் அவை எதுவும் வெளியிடப்படவில்லை.
  • மண்டல் ஆணையம் ஆனது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள் தொகையை 52% என மதிப்பிட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் 246வது சரத்தின் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது ஏழாவது அட்டவணையின் மத்தியப் பட்டியலில் 69வது இடத்தில் பட்டியலிடப் பட்டுள்ளதால், இது ஓர் ஒன்றிய அரசின் கீழ் உள்ள விவகாரமாக அமைகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவில் அனைத்துச் சாதிகளையும் வெற்றிகரமாக கணக்கெடுத்த முதல் மாநிலமாக பீகார் மாறியது.
  • பின்னர், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்