TNPSC Thervupettagam

சான்றுறுதி அலுவலர் (திருத்தம்) விதிகள், 2025

October 28 , 2025 3 days 28 0
  • சட்ட விவகாரத் துறையானது, 1952 ஆம் ஆண்டு சான்றுறுதி அலுவலர்/நோட்டரிகள் சட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு சான்றுறுதி (திருத்தம்) விதிகளை அறிவித்துள்ளது.
  • இந்தத் திருத்தமானது, குஜராத், தமிழ்நாடு, இராஜஸ்தான் மற்றும் நாகாலாந்தில் அதிக பட்ச எண்ணிக்கையிலான சான்றுறுதி அலுவலர் எண்ணிக்கையை திருத்தி அமைக்கிறது.
  • குஜராத்திற்கான உச்ச வரம்பு 2,900லிருந்து 6,000 ஆகவும், தமிழ்நாட்டிற்கு 2,500லிருந்து 3,500 ஆகவும், இராஜஸ்தானுக்கு 2,000லிருந்து 3,000 ஆகவும், நாகாலாந்திற்கு 200 லிருந்து 400 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
  • ஒரு சான்றுறுதி அலுவலர் என்பவர் ஆவணங்களைச் சரிபார்த்து, அங்கீகரித்து மற்றும் சான்றளிப்பதற்காக, சாட்சி கையொப்பங்களை மேற்பார்வையிட மற்றும் உறுதி மொழிகளை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசு அதிகாரியாவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்