November 17 , 2025
10 days
90
- சாரண்டா காடுகளின் 31,468.25 ஹெக்டேர் பகுதியை வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் ஜார்க்கண்ட் அரசிற்கு உத்தரவிட்டது.
- சால் காட்டு ஆமை, நான்கு கொம்புகள் கொண்ட மறிமான், ஆசிய மரநாய் மற்றும் காட்டு யானைகள் உள்ளிட்ட அருகி வரும் உயிரினங்களுக்கு சாரண்டா வாழ்விடமாக உள்ளது.
- இந்த காடு ஹோ, முண்டா மற்றும் உரான் போன்ற பழங்குடி சமூகங்களை கொண்டு உள்ளது என்பதோடு இந்த அந்தஸ்து மூலம் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
- இந்தியாவின் இரும்புத் தாது இருப்புகளில் 26% இந்தப் பகுதியில் உள்ளது ஆனால் புதிதாக அறிவிக்கப்பட்ட சரணாலயத்தில் எந்தச் சுரங்கமும் இல்லை.
- சரணாலயத்திற்குள் மற்றும் அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் சுரங்க நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
- ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சரண்டா காடு அமைந்துள்ளது.
- இது ஆசியாவின் மிகப்பெரிய சால் காடு ஆகும்.
Post Views:
90