சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினம் - நவம்பர் 17
November 19 , 2019 2330 days 613 0
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினம் அனுசரிக்கப் படுகின்றது.
இத்தினமானது சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டோரையும் அவர்களது குடும்பத்தினரையும் அங்கீகரிக்கின்றது.
இது 1993 ஆம் ஆண்டில், பிரிட்டனைச் சேர்ந்த சாலை விபத்தில் பாதிக்கப் பட்டோருக்கான “ரோட் பீஸ்” என்ற அமைப்பின் தலைவரான பிரிஜிட் சௌத்ரி என்பவரால் நிறுவப் பட்டது.
பின்னர் இது 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.