TNPSC Thervupettagam

சிகரெட் பெட்டிகளில் மிகப்பெரிய எச்சரிக்கை படம்

October 1 , 2018 2442 days 769 0
  • கனடாவைச் சேர்ந்த புற்றுநோய் சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘சிகரெட் பொட்டலங்களில் சுகாதார எச்சரிக்கை: சர்வதேச நிலை அறிக்கை 2018’ன் படி சிகரெட் பொட்டலங்களில் சுகாதார எச்சரிக்கைகளில் உலகின் 206 நாடுகளில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியாவானது ஹாங்காங் மற்றும் தாய்லாந்து உடன் 85% இட எச்சரிக்கைப் படங்களுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • சிகரெட் பெட்டிகளில் மிகப்பெரிய எச்சரிக்கை பட சித்தரிப்பு அடிப்படையில் நாடுகள் தரவரிசையிடப்படுகின்றன.
  • இந்தியாவில் சிகரெட் பெட்டிகளின் இரண்டு பக்கங்களும் 85% அளவில் எச்சரிக்கைகளால் நிரப்பப்பட்டுள்ளன.
  • 2018ன் அறிக்கைப்படி, தைமூர்-லெஸ்டே ஆனது சிகரெட் பெட்டிகளின் முன் மற்றும் பின் பக்கங்களில்5% இட அளவில் மிகப்பெரிய எச்சரிக்கையை கொண்டுள்ளது.
  • இதனையடுத்து, நேபாளம் மற்றும் வனுவாட்டு ஆகியவை 90% உடன் மூன்றவாது இடத்தையும் நியூசிலாந்து 5% உடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
  • இது ஜெனிவாவில் புகையிலை கட்டுப்பாடு பற்றிய WHO (World Health Organization) கட்டமைப்பு ஒப்பந்த மாநாட்டின் (Framework Convention on Tobacco Control - FCTC) 8வது அமர்வில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்