TNPSC Thervupettagam

சிக்சக் பர்வ் 2021

September 5 , 2021 1371 days 605 0
  • சிக்சக் பர்வ் ஆனது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் கடை பிடிக்கப்பட உள்ளது.
  • ஆசிரியர்களின் பங்களிப்பிற்குக் கௌரவமளிக்கும் வகையில் இந்த நிகழ்வானது கொண்டாடப்பட உள்ளது.
  • இந்நிகழ்வின் போது பிரதமர் அவர்கள் 5 முன்னெடுப்புகளைத் தொடங்கி வைக்க உள்ளார். அவை,
    • 10,000 வார்த்தைகளை கொண்ட இந்திய சைகை மொழி அகராதி,
    • பேசும் புத்தகங்கள் (பார்வையற்றோருக்கான ஒலியுணர் புத்தகங்கள்)
    • நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பள்ளித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கட்டமைப்பு,
    • NIPUN பாரத் திட்டத்திற்கான NISTHA ஆசிரியர்கள் பயிற்சித் திட்டம் மற்றும்
    • பள்ளி மேம்பாட்டில் கல்வி தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பெரு நிறுவன சமூக அக்கறையுடைய பங்களிப்பாளர்களுக்கான வசதியை வழங்குவதற்கான வித்யாஞ்சலி தளம் ஆகும்.
  • சிக்சக் பர்வ் 2021 ஆனது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 முதல் 17 ஆம் தேதி வரை கல்வி அமைச்சகத்தினால் கொண்டாடப்பட உள்ளது.
  • ஆசிரியர்களின் தலைசிறந்தப் பங்களிப்பினை அங்கீகரிக்கவும் 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை முன்னோக்கி கொண்டு செல்லவும் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்