மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆனைமலை பகுதிகளின் மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பரப்புகளில் சிங்க வால் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
சிங்கவால் கொண்ட குரங்கு என்பது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழைக்காடு சுற்றுச்சூழல் அமைப்பில் மட்டுமே காணப்படும் ஒரு வட்டார இனமாகும்.
பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் போன்ற மனித ஆதிக்கப் பகுதிகளில் 37 குரங்குக் குழுக்கள் இருப்பதை இந்த 40 ஆண்டுகால ஆய்வில் கண்டறிந்தனர்.
இது IUCN செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் CITES இன் இணைப்பு I (Appendix I) இல் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 இன் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப் படுகிறது.