TNPSC Thervupettagam

சிறப்பு அதிகாரிகளின் பதவிக் கால நீட்டிப்பு 2025

July 10 , 2025 2 days 38 0
  • தமிழக மாநில அரசானது, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்கான சிறப்பு அதிகாரிகளின் (SOs) பதவிக் காலத்தினை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • இந்த நீட்டிப்பு ஆனது 28 மாவட்டங்களில் உள்ள 9,581 கிராமப் பஞ்சாயத்துகள், 314 பஞ்சாயத்து ஒன்றிய சபைகள் மற்றும் 28 மாவட்டப் பஞ்சாயத்துகளில் பொருந்தும்.
  • இந்த நீட்டிப்பை நடைமுறைப்படுத்த ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒரு மசோதாவாக அது மாற்றப்படும்.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து SO அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
  • இங்கு உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டத் தாமதங்கள் மற்றும் நிலுவையில் உள்ள மன்ற அமைப்புகளின் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றினை நீட்டிப்புக்கான காரணங்களாக அரசாங்கம் குறிப்பிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்