TNPSC Thervupettagam

சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்பு குறித்தத் தரவு

February 21 , 2023 860 days 380 0
  • கடந்த ஐந்து ஆண்டுகளில், குஜராத்தில் சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்புகள் அதிகபட்சமாக 80 ஆக பதிவாகியுள்ளன.
  • இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (76), உத்தரப் பிரதேசம் (41), தமிழ்நாடு (40), பீகார் (38) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • ஒன்பது ஒன்றியப் பிரதேசங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் பதிவான சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்புகளில் டெல்லியில் அதிகபட்சமாக 29 மரணங்கள் பதிவு ஆகியுள்ளன.
  • இதைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் 4வது இடத்தில் உள்ளது.
  • சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்புகளானது 2017-2018 ஆம் ஆண்டில் 146 ஆகவும், 2018-2019 ஆம் ஆண்டில் 136 ஆகவும், 2019-2021 ஆம் ஆண்டில் 112 ஆகவும், 2020-2021 ஆம் ஆண்டில் 100 ஆகவும் மற்றும் 2021-2022 ஆம் ஆண்டில் 175 ஆகவும் பதிவு ஆகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்