TNPSC Thervupettagam

சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம்

February 25 , 2023 880 days 660 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது ‘சிவசேனா’ என்ற பெயரையும் அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, பாலா சாகேப் தாக்கரேவால் நிறுவப்பட்ட அசல் கட்சி இது என்று அங்கீகரிக்கப்பட்டது.
  • "பெரும்பான்மைச் சோதனை" என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையமானது இந்த முடிவினை மேற்கொண்டது.
  • ஏக்நாத் ஷிண்டே தரப்பிரனருக்கு ஆதரவு அளிக்கும் சட்டசபை உறுப்பினர்கள் குழுவானது கிட்டத்தட்ட 76% வாக்குகளையும், உத்தவ் தாக்கரே தரப்பினர் 23.5% வாக்குகளையும் பெற்றனர்.
  • ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சி மக்களவையில் வென்ற 18 நபர்களில் 13 நபர்களையும், அம்மாநிலச் சட்டமன்றத்தில் வென்ற 56 நபர்களில் 40 நபர்களையும் கொண்டுள்ளதாக உரிமை கோரியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சியில் 56 சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர்.
  • கடந்த ஜூன் மாதத்திலிருந்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்