2022 ஆம் ஆண்டில் மேலும் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் (Self Help Groups - SHGs) உருவாக்கப்பட இருப்பதாக 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அறிவித்தார்.
தற்போது, இந்தியாவில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் 6 கோடி பெண்களைக் கொண்டுள்ளன.
இது பற்றி
சுய உதவிக் குழுக்கள் என்ற கருத்தாக்கமானது 1992 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டது.
“குடும்பஸ்ரீ” என்ற திட்டமானது கேரளாவில் தொடங்கப்பட்ட நாட்டின் மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான ஒரு சுய உதவிக் குழுத் திட்டமாகும்.
இத்திட்டமானது கேரள மாநில அரசின் சுய உதவிக் குழுவாகும்.