மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகம் பெண்கள் சுரங்கங்களில் வேலை செய்வதற்கான நேரத் தடையை விலக்கியிருக்கின்றது.
2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சகம் தரைக்கு மேலுள்ள சுரங்கங்களிலும் (திறந்த வெளிச் சுரங்கங்கள் உள்பட) தரைக்கு அடியில் உள்ள சுரங்கங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய பெண்கள் பணியமர்த்தப் படக் கூடும் என்று அறிவித்திருக்கின்றது.
முன்னதாக 1952ம் ஆண்டு சுரங்கங்கள் சட்டத்தின் 46வது பிரிவின் படி சுரங்க உரிமையாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே சுரங்கத்தினுள் பெண் பணியாளர்கள் பணியாற்றிட அனுமதிக்கப் பட்டனர். தற்போது அரசு இந்த விதிமுறையிலிருந்துப் பெண்களுக்கு விலக்கு அளித்திருக்கின்றது.