2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 முதல் 15 ஆம் தேதி வரை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் சஹரி சம்ரித் உத்சவ் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின்போது பகுதி நிலையிலான கட்டமைப்புகள், நகர வாழ்வாதாரக் கட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றிற்கு மொத்தம் 40 விருதுகள் வழங்கப்பட்டன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கார் மாநகராட்சி நிர்வாகம் 2019 ஆம் ஆண்டிற்கான சுவச்தா சிறப்புமிகு விருதுகளை வென்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டின் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது விருதுகளைப் பெற்றுள்ளன.