சர்வதேசக் காவல்துறையின் (இன்டர்போல்) ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் தகவல் திருடர்களுடன் தொடர்புடைய 20,000க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் IP முகவரிகள் அல்லது தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த செக்யூர் நடவடிக்கையில் (Operation Secure) 26 நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க அமைப்புகள் ஈடுபட்டன.
தகவல் திருடும் தீம்பொருளுடன் இணைக்கப்பட்ட தீங்கிழைக்கும் உள்கட்டமைப்பை அகற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அவை சேவையகங்களைக் கண்டறிதல், நேரடி வலையமைப்புகளைக் கண்டறிதல் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வலை தளங்களை நீக்குதல் ஆகியவற்றில் பணி ஆற்றின.
இதில் தகவல் திருடும் தீம்பொருள் ஆனது இணையவெளிக் குற்றவாளிகளுக்கான ஒரு முதன்மைக் கருவியாக உள்ளது.