ஜம்மு & காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான இரயில் பாலமான செனாப் இரயில் பாலத்தினைப் பிரதமர் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதல் கம்பிவட தாங்கு இரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த செனாப் பாலம் ஆனது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்திலும், ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்திலும் உள்ளது.
இந்த இரயில் திட்டத்திற்கு, 1995 ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அனுமதி அளிக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் இத்திட்டத்தினை ஒரு தேசிய திட்டமாக அறிவித்தார்.
உதம்பூர், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா இடையேயான 272 கிலோமீட்டர் நீளத்தில், 160 கிலோ மீட்டர் தூரமானது ஏற்கனவே 2014 ஆம் ஆண்டிற்கு முன்பே திறக்கப்பட்டது.
அஞ்சி பாலம் ஆனது ஒரு இமாலயப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கம்பி வடந்தாங்கு இரயில் பாலமாக உள்ளது.
இது உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா இரயில் பாதையின் கத்ரா-பனிஹால் பகுதியில் ஒரு முக்கிய இணைப்பை நிறுவுகிறது.
இந்தத் திட்டத்தினை இந்திய இரயில்வே நிர்வாகத்தின் கொங்கன் இரயில்வே கழகம் மேற்கொண்டது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் இரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் ஜம்மு பிராந்தியத்திற்கும் இடையிலான முதல் இரயில் சேவை இணைப்பு இதுவாகும்.
272 கிலோ மீட்டர் நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் சேவை இணைப்பு (USBRL) திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
USBRL ஆனது T50 எனப்படுகின்ற இந்தியாவின் மிக நீளமானப் போக்குவரத்து சுரங்கப் பாதையினைக் கொண்டுள்ளது என்பதோடு இது ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள காரி மற்றும் சம்பர் இடையே 12.77 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது.