சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
June 28 , 2026 16 days 109 0
சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 55 தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் சென்னை உயர் நீதிமன்ற (தேர்தல் மனுக்கள்) விதிகள், 1967 ஆகியவற்றின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏக்கள்) உள்ளிட்ட பல தலைவர்களின் தேர்தலை எதிர்த்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் அல்லது வாக்காளர் தேர்தல் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த மனுக்களின் எண்ணிக்கை 12 (2011), 23 (2016), 13 (2021) என இருந்த நிலையில், தற்போது சுமார் 55 (2026) ஆக அதிகரித்துள்ளதுடன் சென்னை உயர் நீதிமன்றத் தேர்தல் அமர்வு உருவாக்கப்பட்டதற்குப் பிறகு இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும்.