TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் நிகழ்நேர வன எச்சரிக்கை அமைப்பு

May 7 , 2025 11 hrs 0 min 30 0
  • மத்தியப் பிரதேச வனத்துறையானது, காடழிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக என செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ஓர் எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • இது இந்தியாவில் இந்த மாதிரியிலான முதவ் அமைப்பாகும்.
  • இந்த நிகழ்நேர வனத்திற்கான எச்சரிக்கை அமைப்பானது, சிவபுரி, குணா, விதிஷா, புர்ஹான்பூர் மற்றும் காண்ட்வா ஆகிய மாவட்டங்களில் ஒரு சோதனைத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
  • மேகக்கணிமையின் அடிப்படையிலான அமைப்பான இது, செயற்கைக்கோள் தரவு, இயந்திர கற்றல் படிமுறைகள் மற்றும் நிகழ்நேரக் களக் கருத்துரைப்புகளை மிகவும் நன்கு ஒருங்கிணைத்து வனப்பகுதிகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு துல்லியத்துடன் கண்காணிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டு இந்திய வன ஆய்வு அறிக்கையின்படி, மத்தியப் பிரதேசம் 85,724 சதுர கி.மீ. பரப்பளவில் மிகப்பெரிய காடு மற்றும் மரங்கள் கொண்ட ஒரு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசமானது, சுமார் 612.41 சதுர கிலோ மீட்டர் வனம் சார் நிலத்தை அதிக அளவில் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்