TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு

August 16 , 2025 2 days 30 0
  • யானைகள் இறப்பதைத் தடுப்பதற்கான செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு ஆனது, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோயம்புத்தூர் பிரிவின் மதுக்கரை வனப்பகுதியில் உள்ள இரயில் பாதைகளில் நிறுவப்படத் தொடங்கப்பட்டது.
  • இது இன்று வரை சுமார் 2,800 காட்டு யானைகள் பாதுகாப்பாக இரயில் பாதைகளைக் கடக்க உதவியது.
  • இந்தத் திட்டமானது, மனித மற்றும் வனவிலங்கு மோதலைக் குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ரேடியோ பட்டைகள் மற்றும் செயற்கைக் கோள் தரவுகளைப் பயன்படுத்துகிறது.
  • வனப்பகுதிகள் வழியாகக் கடக்கும் அனைத்து இரயில் பாதைகளிலும் இதேபோன்ற முன் எச்சரிக்கை அமைப்பு நிறுவப்படும்.
  • இரயில் மோதல்களால் யானைகள், புலிகள் மற்றும் பிற வன விலங்குகள் இறப்பதைத் தடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
  • இந்த முன்னெடுப்பானது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் (MoEF&CC) செயல்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்