TNPSC Thervupettagam

செயலற்ற கருந்துளை மீள்துவக்கம்

April 20 , 2026 2 days 58 0
  • சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருந்த ஒரு மிகப்பெரிய கருந்துளை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • ஒரு விண்மீன் திரளின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளை நீண்ட செயலற்ற கட்டத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
  • அது அருகிலுள்ள வாயு, தூசி மற்றும் நட்சத்திரப் பொருட்களை உட்கொள்ளத் தொடங்கி, கடுமையான கதிர்வீச்சையும் ஆற்றலையும் வெளியிடுகிறது.
  • சக்திவாய்ந்த உயர்-ஆற்றல் ஜெட் கதிர்வீச்சுகள் காரணமாக இந்த திடீர் செயல்பாடு ஒரு "காஸ்மிக் வெடிப்பு" என்று ஒப்பிடப்படுகிறது.
  • வானியல் துறையில் கருந்துளைகளின் சுறுசுறுப்பான கட்டங்கள் செயலில் உள்ள விண்மீன் கருக்கள் (AGN) என்று அழைக்கப்படுகின்றன.
  • பால்வீதி உட்பட பெரும்பாலான விண்மீன் திரள்களின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளைகள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்