இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சைடஸ் கேடிலா ‘சைகோவ்-டி’ எனப்படும் தனது கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக வேண்டி இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க உள்ளது.
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் இது உலகின் முதலாவது டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்தாக விளங்கும்.
இத்துடன், நாட்டில் பயன்பாட்டிலிருக்கும் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கையானது 4 ஆக உயரும்.
சைகோவ்-டி ஆனது ஊசி வழியே அல்லாமல் ஜெட் உட்செலுத்தி எனும் ஒரு உபகரணத்தின் மூலம் உட்செலுத்தப்படும் ஒரு நோய்த் தடுப்பு மருந்தாகும்.