மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டின் “சைபர் ஆஷ்வாஸ்ட்” என்று அழைக்கப்படும் முதலாவது இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவை குஜராத்தில் உள்ள காந்தி நகரில் தொடங்கி வைத்தார்.
ஆஷ்வாஸ்ட் உடன், காணொளி ஒருங்கிணைப்பு மற்றும் மாநில அளவிலான மேம்பட்ட பாதுகாப்புத் திட்டமான விஸ்வாஸ் என்னும் திட்டமும் தொடங்கப் பட்டுள்ளது.
ஆஷ்வாஸ்ட் மற்றும் விஸ்வாஸுடன், நேத்ரங் என்ற திட்டமும் தொடங்கப் பட்டுள்ளது.
சைபர் ஆஷ்வாஸ்ட் என்பது விஸ்வாஸ் மற்றும் நேத்ரங் உதவியுடன் இணையவழிக் குற்றங்களைத் தடுக்கச் செயல்படும் ஒரு பிரிவு ஆகும்.