சோமாலிலாந்து குடியரசை ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு இஸ்ரேல் ஆகும்.
சோமாலிலாந்து என்பது ஆப்பிரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள ஒரு சுயமாக அறிவிக்கப்பட்ட நாடாகும் என்பதோடுஇது 1991 ஆம் ஆண்டு முதல் சோமாலியாவின் கட்டுப்பாடு இல்லாமல் தனித்து செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேலுக்கும் சோமாலிலாந்துக்கும் இடையிலான பரஸ்பர அங்கீகாரத்தின் கூட்டு அறிவிப்பின் மூலம் இந்த அங்கீகாரம் முறைப்படுத்தப்பட்டது.
வேளாண்மை, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சோமாலிலாந்துடன் கூட்டுறவினை மேற்கொள்வதற்கான திட்டங்களை இஸ்ரேல் அறிவித்தது.
ஆனால் சோமாலியா நாடானது இந்த சோமாலிலாந்து அங்கீகாரத்தை நிராகரித்து, சோமாலிலாந்து அதன் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்று கூறியது.
ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) சோமாலியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப் படுத்தின.