மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் 25 ஜலாஜ் வாழ்வாதார மையங்களைத் திறந்து வைத்தார்.
இவை நமாமி கங்கை இயக்கம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
இந்த முயற்சி, கங்கை நதிப் படுகையில் நதியின் பாதுகாப்பை நீடித்த வாழ்வாதாரங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுழற்சிப் பொருளாதார மாதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த மையங்கள் உள்ளூர் மக்களுக்குப் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத் திறன்களில் பயிற்சி அளிக்கின்றன.
இந்தத் திட்டம் சமூகப் பங்கேற்பு, பெண்களின் ஈடுபாடு மற்றும் நீர்வாழ் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.