2026 ஆம் ஆண்டு மே 27 அன்று ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசுக்கு இடையிலான உயர்மட்ட கூட்டத்தின் போது இந்த முன்னெடுப்பு மதிப்பாய்வு செய்யப் பட்டது.
ஜல் சஞ்சய் ஜன் பாகிதாரி என்பது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப் பட்ட ஒரு நாடு தழுவிய நீர் பாதுகாப்பு முன்னெடுப்பாகும்.
மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் சமூகப் பங்கேற்பை இது ஊக்குவிக்கிறது.
இந்தத் திட்டமானது சமூகப் பங்கேற்பு, குறைந்த செலவு மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு ஆகிய 3C கட்டமைப்பைப் பின்பற்றுகிறது.
குறைந்த செலவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகம் சுரண்டப்பட்ட மாவட்டங்களில் நீர் இருப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.