ஜல் ஜீவன் திட்டம் (JJM) 2.0-இன் கீழ் சீர்திருத்தம் அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட 12-வது மாநிலமாக மேகாலயா உருவெடுத்து உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குச் செயல்படும் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டம் 2.0 என்பது சேவை வழங்கல், நிலைத்தன்மை மற்றும் பரவலாக்கப் பட்ட நீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்த ஒப்பந்தம், நீர் விநியோகத்தை நிர்வகிப்பதில் கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மேகாலயா தற்போது 83%-க்கும் அதிகமான கிராமப்புற குழாய் நீர் இணைப்புகளை எட்டியுள்ளது.