TNPSC Thervupettagam
July 10 , 2025 2 days 35 0
  • ஜூலை 01 ஆம் தேதி முதல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் அதிக இடைத்தரகுக் கட்டணம் மற்றும் மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் காரணமாக ஸ்விக்கி மற்றும் சோமாட்டோ ஆகிய செயலிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
  • இனி அதற்குப் பதிலாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட உணவு விநியோகச் செயலியான ஜாரோஸ் என்பதைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
  • ஜாரோஸ் ஆனது, உணவுக் கூடங்களுக்கு 1,500 ரூபாய் (+GST), உணவகங்களுக்கு 3,000 ரூபாய் (+GST) என்ற வீதத்தில் ஒரு ஆர்டருக்கு இடைத் தரகு இல்லாமல் குறைந்த விலையிலான மாதாந்திரச் சந்தா மாதிரியில் இயங்குகிறது.
  • சுமார் 50 உணவகங்கள் இந்தத் தளத்தில் இணைந்துள்ளதன் மூலம் முந்தைய சேவை வழங்கீட்டு நிறுவனங்கள் மாதந்தோறும் 20,000 முதல் 30,000 ரூபாய் வசூலித்ததுடன் ஒப்பிடும் போது 90% செலவுகளை மிச்சப் படுத்தியுள்ளன.
  • திருச்செங்கோடு மற்றும் இராசிபுரத்தில் உள்ள இதர உணவக உரிமையாளர்களும் விரைவில் ஜாரோஸ் செயலியில் சேரத் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்