ஜார்க்கண்ட் நாள் - நவம்பர் 15
November 15 , 2020
1666 days
538
- ஜார்கண்ட் மாநிலம் பீகார் மறுசீரமைப்புச் சட்டத்தால் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று இந்தியாவின் 28வது மாநிலமாக உருவாக்கப் பட்டது.
- சோட்டா நாக்பூர் பகுதியானது பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலமாக அமைக்கப் பட்டது.
- சோட்டா நாக்பூர் பீடபூமியானது கோயல், தாமோதர், பிராமணி, கர்காய், மற்றும் சுபர்ணரேகா உள்ளிட்ட பல்வேறு நதிகளின் மூலமாகும்.
- ஜார்க்கண்ட் மாநிலம் 'வனங்களின் நிலம்' அல்லது 'புதர் நிலம் ' என்றும் அழைக்கப் படுகிறது.
- நவம்பர் 15 ஆம் தேதியானது பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப் படுகிறது.
- அவர் முண்டா என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராளியாவார்.

Post Views:
538