இத்திட்டமானது மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்களால் தொடங்கப்பட்டது.
இளைஞர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வேலை வாய்ப்பினை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு இந்த டிஜிட்டல் திறன் திட்டமானது தொடங்கப்பட்டது.
டிஜி சாக்சாம் என்பது மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் மற்றும் தொழிலாளர் மற்றும்வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
இத்திட்டமானது “ஆகா கான் இந்திய ஊரக உதவித் திட்டம்” என்ற திட்டத்தின் மூலம் இத்துறையில் அமல்படுத்தப்படும்.