விஸ்தாரா விமான நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகளுக்கான மூன்றாவது முனையத்தில் பயோமெட்ரிக் முக அங்கீகார நுழைவு முறையை 3 மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் தொடங்கப் போவதாக தில்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், நுழைவு, பாதுகாப்பு மற்றும் புறப்படும் இடம் என அனைத்து சோதனைச் சாவடிகளிலும் முக அங்கீகார முறையின் அடிப்படையில் பயணிகளின் நுழைவு தானாக செயலாக்கப்படும்.
செல்லத்தக்க விமான பயணச் சீட்டு மற்றும் அரசு அடையாள அட்டைகளைக் கொண்ட பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
விமானம் புறப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட பயணிகளின் தரவுகள் அழிக்கப்படும்.