மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) ஆனது 2023 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் எண்ணிம ஊடக நெறிமுறைகள் குறியீடு) திருத்த விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய விதிகளின்படி, மத்திய அரசின் எந்தவொரு நடவடிக்கை தொடர்பான போலிச் செய்திகளைக் கண்டறியும் மெய்த் தகவல் சரிபார்ப்புப் பிரிவினை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அமைக்கலாம்.
செய்தித் தகவல் பணியகத்தின் (PIB) மெய்த் தகவல் சரிபார்ப்புப் பிரிவானது இந்தப் பணிக்கான "விருப்பத் தேர்வு நிறுவனம்" ஆகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
மெய்த் தகவல் சரிபார்ப்புப் பிரிவினால் "போலி" எனக் கருதப்படும் எந்தவொருச் செய்தியும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலிருந்தும் அகற்றப் பட வேண்டும்.