TNPSC Thervupettagam

தடுப்புக் காவலுக்கான ஆலோசனைக் குழு

August 31 , 2026 13 days 81 0
  • தமிழ்நாடு அரசு தடுப்புக் காவலுக்கான ஆலோசனைக் குழுவை மறுசீரமைத்தது.
  • இது தொடர்பாக உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது.
  • தமிழ்நாடு அரசு சமீபத்தில், 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் ஆலோசனைக் குழுவை மறுசீரமைத்து, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசனை அதன் தலைவராக நியமித்துள்ளது.
  • அந்த ஆணையின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான பி. கலையரசன் மற்றும் வி. பார்த்திபன் இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • ஆலோசனைக் குழு என்பது, ஒரு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவரை மூன்று மாதங்களுக்கு மேல் காவலில் வைக்கப் போதுமான காரணம் உள்ளதா என்பதை மறுஆய்வு செய்யும் நீதிபதிகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும்.
  • ஆலோசனைக் குழு என்பது, அரசியலமைப்பின் 22(4) சரத்தில் நிலை நிறுத்தப் பட்டுள்ளபடி, இந்தியாவில் தடுப்புக் காவல் தொடர்பான நிர்வாகத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்புப் பாதுகாப்பாகும்.
  • நிரூபிக்கப்பட்ட குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனைத் தடுப்பிலிருந்து வேறுபட்டு, எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு செயலைத் தடுப்பதற்காக விசாரணையின்றி சிறை வைக்கப்படும் தடுப்புக்காவல், அதன் தாராளமயமற்ற தன்மை இருந்த போதிலும், சட்டத்தை உருவாக்கியவர்களால் வேண்டுமென்றே தக்க வைக்கப் பட்டது, ஆனால் அது நடைமுறைச் சோதனைகளால் பாதுகாக்கப்பட்டது.
  • சரத்து 22(4)-இன்படி, தடுப்புக்காவலுக்கு அங்கீகாரம் அளிக்கும் எந்தவொரு சட்டமும், பொருத்தமான உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் பரிந்துரைகளின்படி அமைக்கப் பட்ட ஒரு ஆலோசனைக் குழு, அந்தக் காலக்கெடு முடிவதற்குள், அத்தகைய தடுப்பிற்குப் போதுமான காரணம் இருப்பதாகத் தனது கருத்தில் அறிக்கை சமர்ப்பிக்காத வரையில், மூன்று மாதங்களுக்கு மேல் தடுப்பாணையை அனுமதிக்க முடியாது.
  • ஆலோசனைக் குழுவின் அமைப்பே ஒரு பாதுகாப்பாகும்.
  • 44-வது அரசியலமைப்புத் திருத்த விவாதத்திற்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தங்களின் படி, நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ நிலையின்படி, அந்தக் குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர்கள், இருந்தவர்கள் அல்லது நியமிக்கப் படுவதற்குத் தகுதி பெற்ற மூன்று நபர்கள் இருக்க வேண்டும்.
  • அதன் தலைவர் உயர் நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் நீதிபதியாக இருக்க வேண்டும்.
  • இந்தக் குழு, பொருத்தமான தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் அமைக்கப் படுகிறது என்பதன் மூலம் இது நேரடி நிர்வாகத் தேர்விலிருந்து அதைப் பாதுகாக்கிறது.
  • 1978 ஆம் ஆண்டின் 44வது திருத்தம், வாரியத்தின் பரிந்துரையின்றி அனுமதிக்கப் படும் தடுப்புக் காவல் காலத்தை மூன்று மாதங்களிலிருந்து இரண்டு மாதங்களாகக் குறைக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட அமைப்புத் தேவையைச் சேர்க்கவும் முயன்றது, ஆனால் அது தொடர்புடைய விதிகள் ஒருபோதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை, எனவே அரசியலமைப்பின் 22(4) சரத்தின் மூன்று மாத குறைந்தபட்ச வரம்பு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்